Friday, 30 September 2011

காதல்


காதலை
கண்களில் வைத்து
உறங்கி விடாதீர்கள்
இதயத்தில் வைத்து
எப்போதும் இயங்க
வையுங்கள்

Monday, 26 September 2011

காதல்

காதல்
சிலருக்கு வாழ்க்கையின் 

ஆரம்பம் சிலருக்கு 
வாழ்க்கையின் முடிவு.....

தோல்வி


பேசாதே என்றாலும்
வாய் வலிக்க பேசுவாய்
இன்று என் மனம் வலிக்க
மௌனமாய் போவதேன்.

மர்மம்


எம் உறவுகளின் உணர்வு
மர்மம் என்று மாறுவேடம் போட்டு
மகளீரை இலக்கு வைத்து
மண்டியிட வைக்கிறார்க ள்
மர்மம்

Sunday, 25 September 2011

காதல்


நானோ உன்னை சாகும்வரை காதலிக்கத்
தயாராய் இருக்கிறேன்.....
நீயோ என்னைக் காதலிக்காமலே சாகடிக்கிறாய்..

விழிகள்


உன்பெயர் சொல்லி
அழைக்கும் போதெல்லாம்
என் விழிகள் தான்
உன் பெயர் சொல்வதாய் 
நீ..சொள்கிறாய்.. 
அட..எனக்கு தெரியாமல்   
என் விழிகள்
எப்போது போச 
கற்றுக் கொண்டன.

விழிகள்


நித்தம் 
உன் பார்வை
விழுமேன நினைத்த
என் விழிகள்
உன் மனதில்
நானில்லையென்று
தெரிந்ததும்
நித்தம் மழை பொளியிதடி
விழிகள்

நான் மட்டும்

 உன்னோடு
பேசிக் கொள்ள
இரவுகளை நாடினேன்

அம்மா பாவம்



இப்பொழுதெல்லாம்
கோவிலுக்கு
தவறாமல் வருகிறேன்
எனக்கு பக்தி
வந்து விட்டதென
என் அம்மா மிகுந்த
ஆனந்தப்படுகிறார்கள்


அம்மா

ஒரு நாளில் எத்தனை முறை அவள் இதயம் துடிக்கிறதோ எனக்கு தெரியாது ... ஆனால் அதில் அதிக துடிப்பு என்னை பற்றியது என்பதை மறுக்க முடியாது.... அம்மா 

நினைவுகள்


உன் நினைவுகள் 
ஒவ்வொன்றாய் 
சேர்த்து வைத்திருக்கிறேன் 
சிறு பிள்ளைத்தனமாய்

Tuesday, 20 September 2011

என் காதல்



காதலியே என் ஆயுள் அழியும்வரை காத்திருப்பேன்
விடை காண என் காதல் விடை காணும் வரை
உலகில் புரியா காதல் என் காதல்தான்
உலகம் அழிந்தாலும் அழியாக்காதலும் என் காதல்தான்.

Monday, 19 September 2011

பிப்ரவரி


என்ன கொடுமை
காதலர் தினம்
இருப்பதானால் தானோ
என்னவோ
தெரியவில்லை
பிப்ரவரி
மாதத்திற்க்கு
கூட ஆயுள் குறைவு

இதயம்

வாழ்வில் நாம் சிலரையோ அல்லது பலரையோ கடந்திருக்கலாம் ஆனால் இதயம் என்பது ஒருத்தருக்கு மட்டுமே சொந்தமாக இருக்க வேண்டும்

மொழி

காதல் எனக்கு மொழி எதையும் கற்று கொடுக்கவில்லை ஆனால்
கற்று கொடுத்தது வலியை எந்த மொழியும் இல்லாமல்

அழுகிறேன்


உனக்காக அழுகிறேன்
உனக்குத் தெரியாது நீ சிரித்தால்
உலகம் ஒருநாள் சொல்லும்
உனக்காக அழுதவன் இவன் மட்டும்தான் என்று

கனவு

பல இரவுகள் உறங்கிப்போகாத
எனது இமைகளிடம் கேட்டுப்பார்
கனவிலும் உனது வருகைக்காக
காத்திருந்து ...ஏமாந்ததை
சொல்லி அழும் 

சண்டை

 
அவளிடம் நீண்ட நேரம்
பேசுவதற்க்கு உதவுவது
காரணமில்லாத சண்டை தான்

அறியாது

முதல் முறையாக 
என்னை நினைத்து 
நீ கண்ணீர் விடுவாய் 
எழுந்து உன் கண்ணீரைத் 
துடைக்க முயற்சி செய்வேன் 
நான் இறந்துவிட்டேன் 
என்பதையும் அறியாது

Sunday, 18 September 2011

வலி

காதல் என்பதை யார் வேண்டுமானாலும் 
    கற்பனை பண்ணமுடியும் ஆனால் அதன் வலியை காதலித்தவன் மட்டுமே உணர முடியும்

Saturday, 17 September 2011

காதல்

இரு இதயம் பேசும்
ஒரு மொழி காதல்

Friday, 16 September 2011

உண்மைக் காதல்

  காதலையும் வெறுத்தேன்
  என் காதலிக்கு பிடிக்காதென்று

காதல் எதற்கு

கோபத்திலும் கெடுதல் செய்யாத அப்பா.
திட்டினாலும் நாம் அழும் பொது அழும் அம்மா .
அடித்தாலும் அழுதாலும் பாசமான சகோதரி.
சண்டை போட்டாலும் நம் நலம் விரும்பும் அண்ணன் .
நம் அடித்தாலும் அடுத்த நொடி சிரித்து பேசும் தம்பி
கஷ்டத்திலும் தோல் கொடுக்கும் நண்பன்.
நமக்கு இன்பம் தர இவர்கள் இருக்க.......

அழவைக்கும் "காதல்" எதற்கு ....vtr

Tuesday, 13 September 2011

விழி


இரும்பு சிறையில் 
இருந்துகூட தப்பி விடலாம் ஆனால் 
அவள் விழி சிறையில் இருந்து தப்ப இயலாது

Monday, 12 September 2011

காதல்




நெருப்பும் கூட
      கண்ணீர் விட்டதே
 ஒரு பெண்ணின் சிரிப்பு 
தன்னை சுட்டதென்று  

சரித்திரம்


படைத்தாய்

என்னைப் படைத்த
 இறைவனே
ஏன் துன்பத்தையும் 
சேர்த்துப் படைத்தாய்
துன்பத்துக்காக 
மனிதனைப் படைத்தாயா
மனிதனுக்காக துன்பத்தைப்
 படைத்தாயா

என்னவளே

உன் நிழல் கூட 
முள்ளில் விழாது 
காத்திருப்பேன்
என் உடல் 

மண்ணில் விழும் வரை

கல்லறை



தாஜ்மஹாலும் 
கல்லறை  தான் அது 
   காதலின் கருவறை 
என்று புரியும்வரை..

Sunday, 11 September 2011

கடமை





உலகத்தை வெறுத்து உறவுகளை ஒதுக்கி 
நான் பட்ட வலிகளின் ரணங்களால்
இப்போதெல்லாம் மரணத்தை  
ஏற்றுக்கொள்ளத்தான் என் இதயத்துக்கு
ரொம்பப் பிடிக்கிறது
என் பயணத்தை நகர்த்திவிட 
எண்ணிப் பார்த்தாலும் 
தமிழர்களுக்கென தனிநாடு தேவை
சில கடமைகள் காத்திருப்பது கண்டு
நிறுத்திக் கொள்கிறேன் 

அன்னதானம்





வஸ் ஏறி
செல்வச்சந்நிதி கோயில் போனதும்
அன்னதான மண்டபத்தில்
வரிசையாக நின்றதும்
மறக்க முடியவில்லை இன்று நடந்த ....

தனிமையில்






யோசிக்காமல் நீ செய்யும்
ஒவ்வொரு செயலும்
உன்னை யோசிக்க வைக்கும்

hi

welcome bro