Tuesday, 28 February 2012

கடமை

உலகத்தை வெறுத்து
உறவுகளை ஒறுத்து

நான் பட்ட வலிகளின்
ரணங்களால்
இப்போதெல்லாம் 
மரணத்தை 
ஏற்றுக்கொள்ளத்தான் 
என் இதயத்துக்கு
ரொம்பப் பிடிக்கிறது
என் பயணத்தை நகர்த்திவிட
எண்ணிப் பார்த்தாலும் 
தமிழர்களுக்கென 
தனிநாடு தேவை
சில கடமைகள்
காத்திருப்பது கண்டு
நிறுத்திக் கொள்கிறேன் 


No comments:

Post a Comment